கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பி.எம். கேர்ஸ் திட்டத்தில் இருந்து உதவித் தொகை வழங்கப்படுவதாக மத்திய அரசு தகவல்

0 1973

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 3 ஆயிரத்து 855 குழந்தைகளுக்கு பி.எம். கேர்ஸ் திட்டத்தில் இருந்து உதவித் தொகை வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு நிறுவனங்களில் இல்லாத குழந்தைகளுக்கு 2 ஆயிரம் ரூபாயும், பராமரிப்பு நிறுவனங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு 2ஆயிரத்து 160 ரூபாயும் மாதந்தோறும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வத்சல்யா குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments