ஆந்திர பிரதேசத்தில் வரும் 14.ந் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு.!

0 2865

ஆந்திர பிரதேசத்தில் வரும் 14ந்தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.   

இதன்படி, இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கராந்தி திருவிழாவை முன்னிட்டு மாநில அரசு கடந்த மாதம் 18 முதல் 31ந்தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து இருந்தது.தற்போது அந்த உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments