நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - மாவட்ட வாரியாக தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

0 2957

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க மாவட்ட வாரியாக தேர்தல் பார்வையாளர்களை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

சென்னைக்கு 3 தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு தலா ஒரு பார்வையாளர் என மொத்தம் 40 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மணிகண்டன், ஜான் லூயிஸ், தட்சிணாமூர்த்தி ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் வரும் 4ஆம் தேதி முதல் சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments