குடிபோதையில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டு போலீசில் சரண்..

0 4209
சென்னையில் குடிபோதையில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற நபர் போலீசில் சரணடைந்தான்.

சென்னையில் குடிபோதையில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற நபர் போலீசில் சரணடைந்தான்.

புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் தளபதி - சண்முகப்பிரியா தம்பதி. கப்பல் தொழிலாளியான தளபதி, கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்குப் போகாமல் மது குடித்துவிட்டு வந்து மனைவி, மகன்களை அடித்துத் துன்புறுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இதனால் வீட்டைத் தன் பெயரில் எழுதித் தருமாறு கேட்டு வந்துள்ளார் சண்முகப்பிரியா. நேற்றும் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்த கணவனிடம் அதுகுறித்துக் கேட்கவே, ஆத்திரத்தில் சமையலறையில் இருந்த கத்தியைக் கொண்டு சண்முகப்பிரியாவைக் சரமாரியாகக் குத்தியுள்ளான் தளபதி.

பின்னர் நேராகக் காவல் நிலையம் சென்று சரணடைந்திருக்கிறான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சண்முகப்பிரியா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments