கர்நாடகாவில் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு இன்று முதல் ரத்து.!

0 3395

கர்நாடகாவில் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தொற்று பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் விகிதம் 2 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ள மாநில அரசு, உணவகங்கள், கிளப்புகள், பார்கள் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம் என்றும், அரசு அலுவலகங்கள் முழுமையான பணியாளர்களுடன் இயங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், திரையரங்குகள், உள்ளரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீதம் பேருடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments