ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றில் வெற்றி பெற்றார் ரபேல் நடால்.!

0 5107

ஆஸ்திரேலிய ஓபன் தொடரை போராடி வென்ற ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மெல்போர்னில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவை அனுபவம் வாய்ந்த ரபேல் நடால் எதிர்கொண்டார். தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர்.

சுமார் ஐந்தரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த போட்டியில் சளைக்காமல் விளையாடிய ரபேல் நடால் ரஷ்யாவின் மெத்வதேவை வீழ்த்தினார். 5 செட்கள் வரை நீடித்த போட்டியில் 2க்கு 6, 6க்கு 7, 6க்கு 4,  6க்கு 4, 7க்கு 5 என்ற கணக்கில் வென்ற நடால், 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபன் தொடரை கைப்பற்றினார்.

மேலும், ரோஜர் பெடரர், ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் நடால் படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments