திருவண்ணாமலையில் கிராம ஊராட்சி மன்றத் தலைவரின் உறவினர்களை சிலர் வீடு புகுந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள்.!

0 7094

திருவண்ணாமலை மாவட்டம் கடுகனூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ் குமாரின் உறவினர்களை சிலர் வீடு புகுந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஊராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சந்தோஷ் குமாருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் சந்தோஷ் குமாரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகாரளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை சந்தோஷ் குமாருக்கும், அவரது எதிர்தரப்பினருக்கும் இடையே ரியல் எஸ்டேட் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்றிரவு 10 க்கும் மேற்பட்டோர் சந்தோஷ் குமாரின் வீட்டிற்குள் தடியுடன் புகுந்து, அவரது மனைவி மற்றும் உறவுக்கார பெண்மணியை சரமாரியாகத் தாக்கினர்.

அக்கம்பக்கத்தினர் வந்து இருதரப்பினரையும் சமாதனம் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments