சென்னையில் துணிக் கடைக்குள் புகுந்த ஒரு கும்பல், ஊழியரை அடித்து உதைக்கும் சிசிடிவி காட்சிகள்.!
சென்னை வண்ணாரப்பேட்டை துணிக் கடைக்குள் புகுந்த ஒரு கும்பல், ஊழியரை அடித்து உதைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வண்ணாரப்பேட்டை துணிக் கடைகளில் தெருவில் செல்லும் வாடிக்கையாளர்களைக் கடைக்கு அழைத்து வர இளைஞர்களைப் பணியமர்த்தியுள்ளனர்.
ஒரு கடைக்குச் சென்ற வாடிக்கையாளரைக் கிண்டல் செய்ததாகவும், கையைப் பிடித்து வேறு கடைக்கு அழைத்துச் சென்றதாகவும் கடை உரிமையாளர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் இளைஞர்கள் சிலரைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று கண்டித்து உறுதிமொழி எழுதிவாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த இளைஞர்கள் புகார் கொடுத்தவரின் கடைக்குள் புகுந்து ஊழியர் ஆசிப்பை அடித்து உதைத்துள்ளனர். இது குறித்துக் கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Comments