ஆந்திராவில் கலால்துறை பிரிவு காவலர்களை கள்ளச்சாராய கும்பல் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையதளத்தில் வைரல்.!

0 3174

ஆந்திர மாநிலத்தில் கலால்துறை பிரிவு காவலர்களை கள்ளச்சாராய கும்பல் சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர்.

கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஆலமூர் பகுதியிலிருந்து கோதாவரி ஆற்றை கடந்து ஒரு கும்பல் தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் கள்ளச்சாராய கும்பலை தடுக்க கோதாவரி ஆற்றுப் பகுதியில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது, படகில் வந்த கும்பலை மறித்த அவர்கள், கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்ய முயன்றனர். இதனை அடுத்து, படகில் ஏறிய இரு காவலர்களை கள்ளச்சாராய கும்பல் கண்மூடித்தனமாக தாக்கியது.

இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், வீடியோவின் அடிப்படையில் 6 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments