ஆப்கானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா மருத்துவ உதவி

0 2695

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் 4வது தவணையாக 3 டன் மருந்துகளை இந்தியா அனுப்பியுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள மருந்துகள் காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் நல நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் வரும் வாரங்களில், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மருந்துகள் மற்றும் உணவு தானியங்கள் அடங்கிய மனிதாபிமான உதவிகளை வழங்க இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு மூன்றரை டன் மருந்துகளும் 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments