ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது ; மாநில தேர்தல் ஆணையம்

0 2816
ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது

ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியில் இருந்து விலகாமல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் வேட்பு மனு தாக்கல் செய்தால் ஏற்கனவே வகிக்கும் பதவியை தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றாலும், வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ஏற்கனவே வகித்த பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என பஞ்சாயத்து தலைவர், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments