மாணவர்கள் இ-சேவை மையங்களில் டி.சி, மற்றும் மார்க் ஷீட் ஆகியவற்றை பெறலாம்

0 3784

பள்ளி மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்பட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-2022ஆம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில், அனைத்துச் சான்றிதழ்களும் அவர்தம் இல்லத்திற்கு அருகிலேயே இ-சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றிப் பெற்றுக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி,  மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், புலப்பெயர்வு சான்றிதழ் கல்வி இணைச் சான்றிதழ் , தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் மாணவர்கள் விரைவில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments