ரயிலின் உணவுசமைக்கும் பெட்டியில் தீவிபத்து ; தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் உயிர்சேதம் தவிர்ப்பு

0 2727
உணவு சமைக்கும் பெட்டியில் தீ - உடனடியாக அணைப்பு

மகாராஷ்டிரத்தில் காந்திதாம் - பூரி விரைவு ரயிலின் உணவுசமைக்கும் பெட்டியில் தீப்பிடித்ததையடுத்துப் பெட்டி தனியாகக் கழற்றி விடப்பட்டுத் தீயை அணைத்ததால் பயணிகளுக்குப் பாதிப்பு இல்லாமல் தவிர்க்கப்பட்டது.

குஜராத் மாநிலம் காந்திதாமில் இருந்து ஒடிசாவின் பூரி நோக்கிச் சென்ற விரைவு ரயில் இன்று காலை பத்தரை மணிக்கு மகாராஷ்டிரத்தின் நந்தூர்பருக்கு வந்தது. அப்போது ரயிலின் உணவு சமைக்கும் பெட்டியில் தீப்பிடித்ததையடுத்து தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

தீப்பிடித்த பெட்டியைத் தனியாகக் கழற்றி விட்டதால் மற்ற பெட்டிகளுக்குத் தீப் பரவாமல் தடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயை அணைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments