"உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் பீதியை கிளப்ப வேண்டாம்" - அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

0 3716

உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் பீதியை கிளப்ப வேண்டாம், என அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

எல்லையில் சுமார் ஒரு லட்சம் படைகளை ரஷ்யா குவித்துள்ள நிலையில், உக்ரைனை ஆக்கிரமித்தால் கடும் விளைவுகள் ஏற்படும், என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

இந்நிலையில், இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர், மேற்கத்திய நாடுகளின் எச்சரிக்கைகளால் உக்ரைனின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் நாட்டிற்குள் இதுவே மிகப்பெரிய ஸ்திரமற்ற நிலையை உருவாக்குவதாகவும் கூறியுள்ளார்.

நீண்ட காலமாகவே உக்ரைன் மக்கள் போர் அச்சத்துடனேயே வாழ்வதாகவும், வழக்கத்திற்கு மாறான ரஷ்யாவின் படை குவிப்பே தற்போதைய பதற்றத்திற்கு காரணம் என்றும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments