சென்னையில் பழ வியாபாரி உள்பட 3 பேரை கடத்தி குடும்பத்தாரிடம் 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய பெண் உள்பட 10 பேர் கைது.!

0 2922

சென்னை அடுத்த தையூரில் பழ வியாபாரி உள்பட 3 பேரை கடத்தி குடும்பத்தாரிடம் 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக பெண் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனியை சேர்ந்த பழ வியாபாரி அப்துல் ஜாபர், அவரது கூட்டாளிகள் 2 பேர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து, கடத்தல் தங்கம் மற்றும் வைரங்களை பாதி விலைக்கு வாங்கித் தருவதாக பெண் உள்பட 10 பேரை ஏமாற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

திட்டம் குறித்து அறிந்த 10 பேரும், அப்துல் ஜாபர், மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை கடத்தி அவர்களது குடும்பத்தினரிடம் 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்துல் ஜாபரின் தந்தை அளித்த புகாரில், செல்போன் சிக்னலை வைத்து 10 பேரையும் கைது செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.    

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments