விருதுநகரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது

0 2515

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பாரைப்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக கொடுத்த 500 ரூபாய் கள்ள ரூபாய் நோட்டு என தெரிந்ததையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விசாரணையில், அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையில் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து சில்லரை பெற்றதாக கூறினார். கடையின் உரிமையாளரிடம் விசாரித்ததில் ஈரோட்டிலிருந்து நேரடியாகவும், கொரியர் மூலமாகவும் நோட்டுகள் வருவதாக ஒப்புகொண்டார்.

இதையடுத்து, பேருந்துநிலையம் அருகே கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுக்க வந்த பெண் உட்பட இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள விஜய் என்பவனை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments