குளத்தில் குளிக்க வந்து ஆழம் தெரியாமல் சிக்கிய 6 காட்டு யானைகள்; ஜேசிபி இயந்திரம் மூலமாக மீட்ட வனத்துறை அதிகாரிகள்

0 2185

அஸ்ஸாம் மாநிலம் கோல்பரா பகுதியில் ஒரு குளத்தில் சிக்கிக் கொண்ட ஆறு காட்டு யானைகளை வனத்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலமாக மீட்டனர்.

மாலையில் தண்ணீர் குடிக்க வந்த 10 காட்டு யானைகள் குளத்திற்கு வந்தன. இதில் ஆறு யானைகள் குளிக்க எண்ணியபோது ஆழம் தெரியாமல் நீரில் சிக்கியதாக ஊர்மக்கள் தகவல் தெரிவித்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதையடுத்து குளத்தின் பக்கவாட்டு பகுதிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் வெட்டி அகலப்படுத்தி யானைகள் மேலே ஏறி வர வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து யானைகளை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments