சனி, ஞாயிறு ஊரடங்கில் இருந்து விடுபட்ட டெல்லி மக்கள்.. இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

0 2017

சனி, ஞாயிறு வார இறுதி ஊரடங்கில் இருந்து டெல்லி விடுபட்டு இன்று இயல்பான பழைய வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.

இன்று அனைத்து கடைகள், சந்தைகள், உணவகங்கள் ,திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. ஒரு நாள் விட்டு ஒருநாள் திறக்க அனுமதிக்கப்பட்ட சந்தைகள் மீதான கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. ஆயினும் இரவு நேர ஊரடங்கு தொடரும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கவும் தடை நீடிக்கிறது.

கொரனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் பத்து சதவீதம் குறைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments