ஒயின் என்பது மதுபானம் அல்ல.. ஒயின் விற்பனை அதிகரித்தால் விவசாயிகள் பயன் பெறுவார்கள் - சஞ்சய் ராவத்

0 2924

ஒயின் என்பது மதுபானம் அல்ல என குறிப்பிட்ட சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத், ஒயின் விற்பனை அதிகரித்தால் விவசாயிகள் அதிக பலன்களை பெறுவார்கள் என்றும் அவர்களின் வருவாய் இரட்டிப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின்களை விற்க அம்மாநில அமைச்சரவை வியாழக்கிழமையன்று ஒப்புதல் அளித்தது.

மேலும், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனைக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவித்தது. மகாராஷ்டிர அரசின் இந்த முடிவுக்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மது அருந்துவதை மாநில அரசு ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments