எருதுவிடும் விழாவில் இருதரப்பினரிடையே மோதல்.. லேசாகத் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்த போலீசார்..!

0 2068

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் திடீரென இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், லேசாக தடியடி நடத்தி போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

கோவிந்தரெட்டி பாளையத்தில் எருதுவிடும் விழா உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இடையில் மாடுபிடி வீரர்களில் ஒருவர் காளை ஒன்றின் கயிற்றைப் பிடித்து இழுக்க முயன்றுள்ளார். அதனை மாட்டின் உரிமையாளர் தட்டிக் கேட்கவே, அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் மோதலாக மாறி 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து வேறு வழியின்றி லேசாக தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தைக் கலைத்தனர். இந்தக் களேபரத்தால் போட்டி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments