கடை முன்பு தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டிக்கேட்கச் சென்ற கடை உரிமையாளரின் மூக்கு உடைப்பு

0 2869
உருட்டுக் கட்டையைப் பிடுங்கி கடை உரிமையாளரைத் தாக்கிவிட்டு தப்பியோட்டம்

சென்னை பள்ளிக்கரணையில் கடை முன்பு தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டிக்கேட்கச் சென்ற பர்னிச்சர் கடை உரிமையாளரின் மூக்கு உடைந்தது.

வேளச்சேரி சாலையில் சுபேர் என்பவருக்குச் சொந்தமான நகாஷி பர்னிச்சர் என்ற கடை இயங்கி வருகிறது. வியாழக்கிழமை இவரது கடை முன்பு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இரண்டு கும்பல் சண்டையிட்டுள்ளது.

கடை முன்பு சண்டையிடாதீர்கள் என கூச்சலிட்ட சுபேரின் கத்தலை காதில் போட்டுக்கொள்ளாமல் அந்த கும்பல் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சுபேர் கடைக்குள் சென்று உருட்டுக்கட்டையுடன் வந்து மோதலில் ஈடுபட்டவர்களைத் தாக்க முயன்றுள்ளார்.

ஆத்திரமடைந்த அந்த கும்பல், சுபேரை கொடூரமாகத் தாக்கி, அவரது மூக்கை உடைத்தது. தொடர்ந்து கடையின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. சுபேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY