மகனை அடித்துக் கொலை செய்த தாய், தந்தை... சடலத்தை சைக்கிளில் எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சி..!

0 10256

மதுரையில், ஆற்றங்கரையில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்ததால், தாய், தந்தையே மகனை அடித்துக் கொலை செய்து, சடலத்தை எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலத்தை சைக்கிளில் கிடத்தி இருவரும் எடுத்துச் செல்லும் சிசிடிவிகாட்சிகள் வெளியாகியுள்ளன. முருகேசன் - லட்சுமி தம்பதியின் மகனான மணிமாறன் குடிப்பக்கழத்திற்கு அடிமையானதால் 5 ஆண்டுகளுக்கு முன்பே மனைவி, 2 குழந்தைகளுடன் தனியாக சென்றுவிட்டார்.

தாய், தந்தையுடன் வசித்து வந்த அவன், தினமும் குடித்துவிட்டு வீட்டில் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், சம்பவத்தன்று ஆத்திரமடைந்த தந்தை முருகேசன் கட்டையை எடுத்து, மகனை தாக்கவே அடி பலமாக பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி உயிரிழந்திருக்கிறான்.

பின்னர், இருவரும் சேர்ந்து சடலத்தை போர்வையில் போர்த்தி, சாக்குப்பைக்குள் போட்டு, சைக்கிளில் கிடத்தி இரவோடு இரவாக எடுத்துச் சென்று பெட்ரோலை ஊற்றி சடலத்தை எரித்துவிட்டு வந்தது தெரியவந்தது.இந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments