ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் உற்சாக குளியல்

0 2599

ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு சொந்தமான உடையவர் தோப்பில், கோவில் யானைகள் குளிப்பதற்காக கட்டப்பட்ட குளியல் தொட்டி இன்று திறக்கப்பட்ட நிலையில், அதில் யானைகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் ஆண்டாள், லட்சுமி ஆகிய இரு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்காக உடையவர் தோப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் சுமார் 40 அடி நீளம், 40 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழத்தில் குளியல் தொட்டியும், யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள ஒரு சுற்றுக்கு 857 மீட்டரில் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

குளியல் தொட்டியில், யானைகள் இரண்டும் ஆனந்த குளியல் போடும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments