2022-23 பட்ஜெட் காகிதமில்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

0 2506

மத்திய நிதிநிலை அறிக்கை 2022-23, பிப்ரவரி 1ம் தேதி, காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான செயலியை அனைவரும் பதிவறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி அன்று காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்யவுள்ளார்.

கைப்பேசி செயலியில், பட்ஜெட் உரை, ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள், நிதி மசோதா என 14 விதமான ஆவணங்களை அரசியல் சாசனத்தில் பரிந்துரைத்துள்ளபடி முழுமையாக பார்வையிடலாம். ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் இந்த செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments