கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுமென அறிவிப்பு

0 8336
கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுமென அறிவிப்பு

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் முறையிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

வரும் 1ஆம் முதல் கொரோனா சிகிச்சை மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஏற்கனவே அறிவித்தபடி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments