சென்னை, கோவையில் நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்க அரசாணை

0 3035

சென்னையிலும் கோவையிலும் நியாய விலைக்கடைகளில் சிறு தானியங்கள் விற்பது தொடர்பாகத் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

கேழ்வரகு, கம்பு, தினை, குதிரைவாலி, சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறு தானியங்களின் மதிப்பைக் கூட்டவும், விவசாயிகளுக்கு நல்ல இலாபம் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

சிறு தானியங்களின் விளைச்சலை அதிகப்படுத்த, விலை நிர்ணயம் செய்ய மாநில அளவில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தலைமையில் குழு அமைத்துள்ளதுடன், மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. சிறு தானியங்கள் அரைக் கிலோ மற்றும் ஒரு கிலோ பாக்கெட்டுகளில் விற்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments