தமிழகத்தில் ஜன.29 ஆம் தேதி சனிக்கிழமையும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் ; மாநில தேர்தல் ஆணையம்

0 2548
ஜன.29 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வரும் சனிக்கிழமையன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது.

இந்நிலையில், வரும் 29ஆம் தேதி பணி நாள் என்பதால் அன்றைய தினமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்துக்கட்சி பிரதிநிதிகளின் கருத்தை ஏற்று வாக்குப்பதிவு செய்ய காலை 7 மணி முதல் மாலை 6  மணி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதித்தவர்கள் மாலை 5 முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments