நீர்நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை என உத்தரவாதம் பெற்ற பிறகே நிலத்துக்குக் கட்டட ஒப்புதலோ, அனுமதியோ வழங்க வேண்டும் -சென்னை உயர் நீதிமன்றம்

0 2713

நீர்நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை என உத்தரவாதம் பெற்ற பிறகே நிலத்துக்குக் கட்டட ஒப்புதலோ அனுமதியோ வழங்க வேண்டுமெனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளை நீதிபதிகள் முனீஷ்வர்நாத் பண்டாரி, ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. அப்போது ஆக்கிரமிப்புகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றப்படும் எனத் தலைமைச் செயலாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

பதிவுத்துறையினர், நீர்நிலை நிலங்களைப் பதிவு செய்யக் கூடாது என உத்தரவிட்டனர். ஆக்கிரமிப்பு இல்லை என உத்தரவாதம் பெறாமல் மின் இணைப்போ, குடிநீர் இணைப்போ வழங்கக் கூடாது என உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments