ரயில்வே தேர்வு முடிவுகளை வெளியிடவும் புதிய தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயில் பெட்டிக்கு தீ வைத்ததால் பரபரப்பு

0 3031
ரயில்வே தேர்வு முடிவுகளை வெளியிடவும், புதிய தேர்வை ரத்து செய்யவும் கோரிக்கை

2019ஆம் ஆண்டின் ரயில்வே தேர்வு முடிவை வெளியிடக் கோரியும், புதிதாக அறிவித்த தேர்வை ரத்து செய்யக் கோரியும் பீகார் மாநிலம் கயாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயில் பெட்டிகளைத் தீவைத்து எரித்தனர்.

2019ஆம் ஆண்டில் நடைபெற்ற ரயில்வே தேர்வின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படாதது குறித்து அதிருப்தியடைந்தவர்கள், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றதால், தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான தேர்வை நிறுத்தி வைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments