போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
ஏர் இந்தியா விமான நிறுவனம் டாடா சன்ஸ் குழுமத்திடம் நாளை ஒப்படைக்கப்படும் என தகவல்
ஏர் இந்தியா விமான நிறுவனம், டாடா சன்ஸ் குழுமத்திடம் நாளை ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
கடன் நெருக்கடியில் சிக்கி திணறிய ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா குழுமம் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது.
ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளும் விற்கப்படுவதாக கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு அறிவித்து, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், வரவு செலவு கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, இதற்கான நடைமுறை நாளைக்குள் முடிந்து விடும் என கூறப்படுகிறது.
சுமார் 90 ஆண்டுகளுக்கு முன் ஜே.ஆர்.டி டாடாவால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் டாடா குழுமத்துடன் இணைய இருக்கிறது.
Comments