ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

0 3314

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சின்னகொட்டிகல்லு பகுதியில் செம்மரக் கடத்தல் நடைபெறுவது தொடர்பான ரகசிய தகவல் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு  கிடைத்தது. இதன் அடிப்படையில் அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது லாரி ஒன்று வனப்பகுதியில் இருந்து வேகமாக வந்தது.

அதைப் பார்த்த போலீசார் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 9 செம்மரக்கட்டைகள், 3 கோடாரிகள் இருப்பது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் ஜமுனாமரத்தூரை சேர்ந்த 6பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments