சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா நிகழ்ச்சி - பொதுமக்கள் நேரில் காண வருவதை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் 

0 2430

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை பொதுமக்கள், மாணவர்கள் நேரில் காண வருவதை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பு மற்றும் தொற்று பரவலை தவிர்க்க அவர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் உரிய மரியாதை செலுத்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் கண்டும், கேட்டும் பொதுமக்கள் மகிழுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY