தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை, குறைவாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்ரமணியன்

0 2643

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை, குறைவாகவே உள்ளது என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில், மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

ஒமைக்ரான் மற்றும் டெல்டா வகை தொற்றால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை குறைவு தான் என்றும், தொற்று தொடர்ந்து குறையும் பட்சத்தில் ஊரடங்கு தேவையில்லை என்றும் கூறினார்.

மேலும், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பியுள்ள நிலையில், சென்னையில் அடுத்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலைமை தெரியவரும், என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments