தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் விடுவிப்பு

0 2872

பாகிஸ்தான் சிறையில் இருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர்களை இந்திய ராணுவத்தினர் அடாரி வாகா வழியாக இந்திய எல்லை பகுதிக்கு அழைத்து வந்தனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு எல்லைத் தாண்டி சென்றதாக பாகிஸ்தான் கடற்படையால் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கராச்சியில் உள்ள லந்தி சிறைச்சாலையில் 4 ஆண்டுகளை கழித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய எல்லைக்குள் நுழைந்த மீனவர்கள் அரசு மற்றும் ராணுவ வீரர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தான் சிறைகளில் சிக்கிக் கொண்டுள்ள மற்ற இந்திய மீனவர்களை மீட்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments