சென்னையில் மது போதையில் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் பலி.!

0 11899

சென்னை வியாசர்பாடியில் மது போதையில் பிரியாணி சாப்பிட்ட குறும்பட இயக்குநர் நடிகர் திடீரென உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஞ்சித் என்ற அந்த 22 வயது இளைஞர் குறும்படங்களை இயக்கி, நடித்து, அதனை யூடியூபில் பதிவேற்றி வருகிறார்.

நேற்று இரவு பிரியாணி கடை ஒன்றில் மது போதையில் அவர் பிரியாணி சாப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், வீட்டிற்கு சென்றவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்த வியாசர்பாடி போலீசார் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பிரியாணி உட்கொண்ட பின் உணவு விஷமாக மாறி உயிரிழந்தாரா, அல்லது உடல்நிலை கோளாறா என பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என்பதால், அதற்காக காத்திருக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments