சாலையில் தொலைந்த 365 கிராம் தங்க நகைகள் அடகுக்கடைக்காரர்கள் சங்க வாட்ஸ் அப் குழு மூலம் மீட்பு

0 8321

சென்னை வேப்பேரியில் சாலையில் தொலைந்த 46 சவரன் தங்க நகைகளை, நகை அடகு கடைக்காரர்கள் சங்க வாட்ஸ் அப் குழு மூலம் மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

கடந்த 17ஆம் தேதி ஈ.வி.கே. சம்பத் சாலை அருகில் மஹிபால் என்பவர் தொலைத்த 365 கிராம் நகைகளை போலீசார் தேடி வந்தனர். நகைகளை கண்டெடுத்தவர்கள் அடகுவைக்க வர வாய்ப்பு என கருதிய மஹிபால் நகை அடகுகடைக்காரர்கள் சங்கத்தை தொடர்பு கொண்டு அவர்களது வாட்ஸ் அப் குழுவில் நகைகள் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

நினைத்தது போல் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு கடையில் அடகு வைக்க வந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் பிடிபட்டவர் ரமேஷ் என்றும் உறவினர் ஜோதி வழங்கிய நகையை அடகு வைக்க வந்த போது சிக்கிக் கொண்டதாக தெரிவித்ததாக போலீசார் கூறினர். மேலும் 365 கிராம் நகைகளை மீட்டு 4 பேரிடம் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments