ஈரோட்டில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே காவலர்கள்.!

0 5361

ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபரை, போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர்.

செகந்திராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்ட அசோக்தாஸ் என்பவர், ஈரோடு ரயில் நிலையத்தில் இறங்க முயன்றுள்ளார்.

ஆனால், அதற்குள் ரயில் புறப்பட்டதால், அவர் தவறி விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர்கள் பழனிசாமி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர், துரிதமாக செயல்பட்டு அசோக்தாஸை பத்திரமாக காப்பாற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments