திருப்பூரில் தொழில் அதிபரை கடத்த முயன்ற வழக்கில் 8 பேர் கைது.!

0 7762

திருப்பூரில், தொழில் அதிபரை கடத்த முயன்ற வழக்கில் 8பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்னம்பாளையம், வேலன் நகரைச் சேர்ந்த பாபு என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவரிடம் இடம் வாங்குவது தொடர்பாக  ஏற்பட்ட பிரச்சினையில் செல்வி என்பவரின் தூண்டுதலின் பேரில் 4 பேர் கொண்ட கும்பல் பாபுவின் வீட்டிற்கு சென்று அவரை கத்திமுனையில் கடத்த முயற்சித்துள்ளது.

இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் சத்தம் போட்டதால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட 8பேரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments