அமெரிக்க எல்லையருகே பனியில் உறைந்த நிலையில் கைக்குழந்தை உள்பட 4 இந்தியர்கள் உயிரிழப்பு.!

0 3279

அமெரிக்க எல்லை அருகே கனடாவில் கைக்குழந்தை உள்பட நான்கு இந்தியர்கள் பனியில் உறைந்து போய் இறந்த சம்பவத்தையடுத்து அமெரிக்க, கனடா நாட்டில் உள்ள தூதரகங்கள் மூலமாக பேச்சு நடத்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உயிரிழந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய உதவிகள் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஒரு ஆண் ஒரு பெண் ஒரு சிறுவன் மற்றும் ஒரு கைக்குழந்தை ஆகியோர் கனடாவின் மானிடோபா மாகாணத்தில் அமெரிக்க எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவ செய்யும் கடத்தல் கும்பலால் அமெரிக்க எல்லையருகே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் அந்த நான்கு இந்தியர்களும் பட்டினியிலும் குளிரிலும் உறைந்து இறந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள கனடா அதிகாரிகள், இந்திய தூதரகம் மூலமாக பேச்சு நடத்தி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments