தமிழகத்தில் நாளையுடன் முடிவடைகிறது வடகிழக்கு பருவமழைக் காலம் ; சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2915
வடகிழக்கு பருவமழை நாளையும் முடிவடையும் என தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் நாளையுடன் முடிவடைவதாக அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறியுள்ளது.

வருகிற 25-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் எனவும், சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் மட்டும் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலம் நாளையுடன் முடிவடையக் கூடும் என கூறிய வானிலை மையம், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள், ராயல்சீமா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments