ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் - அமைச்சர் பொன்முடி

0 9399

கொரோனா பரவி வரும் நிலையில், அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், மாணவர் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்திய பின் பேசிய அவர், பிப்ரவரி 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்தார்.

செமஸ்டர் தேர்வுக்கு பின் நேரடியாக வகுப்பு நடைபெறுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்ற அமைச்சர், ஜுன் மாதத்தில் நடைபெறும் இறுதி கட்ட செமஸ்டர் மட்டும் நேரடி தேர்வாகவே நடைபெறும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments