கொலை மிரட்டல் வழக்கு.. பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார் ஹரிநாடார்.!

0 5138

நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், ஹரி நாடாருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஜூலையில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி, சீமானுக்கு ஆதரவாக ஹரிநாடார் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், பண மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்த அவரை விசாரணைக்காக தமிழகம் அழைத்து வந்த போலீசார், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டதை அடுத்து, பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, ஹரி நாடாரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments