பீகாரில் 5 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா பெண் மருத்துவர்?

0 3003

பீகாரில் பெண் மருத்துவர் ஒருவர் 5 முறை தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை மருத்துவரான விபா குமாரி சிங் என்பவர் 5 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக கோவின் இணையதள ஆவண பதிவுகளை ஆய்வு செய்தபோது தெரிய வந்துள்ளது.

ஆனால் இதனை மறுத்துள்ள அந்த மருத்துவர், அரசு அனுமதித்துள்ள பூஸ்டர் டோஸ் வரை 3 தடுப்பூசிகளை ஆதார் கார்டு மூலம் முறையாக போட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். மற்ற 2 முறை தமது பான் கார்டு தகவல்களை கொண்டு வேறு யாரோ தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் விபா குமாரி சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments