பாஜகவில் இன்று இணைகிறார் முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா யாதவ்

0 5428
பாஜகவில் இன்று இணைகிறார் முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா யாதவ்

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங்கின் மருமகளான அபர்ணா யாதவ் இன்று பாஜகவில் இணைகிறார்.

இதற்காக நேற்று அவர் டெல்லிக்கு வந்துள்ளார். அகிலேஷ் யாதவின் ஒன்றுவிட்ட சகோதரர் பிரதீக் யாதவின் மனைவிதான் அபர்ணா. கடந்த 2017 சட்டமன்றத் தொகுதியில் அவர் லக்னோ கண்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

கடந்த சில நாட்களாகவே அபர்ணா பாஜகவில் இணைய உள்ளதாக வந்த செய்திகளை அகிவேஷ் யாதவ் மறுத்தார். அது குடும்ப விவகாரம் என்று கூறி வந்த நிலையில் இன்று அபர்ணா பாஜகவில் இணைய இருப்பதை உறுதி செய்துள்ளார்.

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும் சமாஜ்வாதியும் நேருக்கு நேர் மோதும் நிலையில் முலாயம் மருமகளே பாஜகவில் இணைவது புதிய திருப்பமாக கருதப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments