கட்டாய தடுப்பூசிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு.!
தடுப்பூசி என்பது முற்றிலும் தன்னார்வமானது என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, எந்தவொரு நபருக்கும் அவரது விருப்பத்திற்கு மாறாக தடுப்பூசியை கட்டாயப்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி குறித்த பொது நல மனுவில், மத்திய அரசு நேற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பல்வேறு ஊடகங்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் யாரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்த முடியாது என்றும் அந்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Comments