கஜகஸ்தானில் நடைபெற்ற கலவரத்தில் 225 பேர் உயிரிழப்பு.!

0 7250

கஜகஸ்தானில் இம்மாத தொடக்கத்தில் வெடித்த கலவரங்களின் போது பாதுகாப்பு படை வீரர்கள் 19 பேர் உள்பட 225 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எண்ணெய் வளமிக்க கஜகஸ்தானில் பெரும்பாலான வாகனங்கள் எல்.பி.ஜி எரிவாயுவால் இயக்கப்படும் நிலையில், அதன் விலை திடீரென உயர்த்தப்பட்டதால் நாடு முழுவதும் வரலாறு காணத வகையில் போராட்டங்கள் வெடித்தன.

அரசு கட்டிடங்கள், கார்கள், வங்கிகளைத் தீயிட்டு கொளுத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

அந்நாட்டு அரசு பதவி விலகிய பின்பும் போராட்டங்கள் ஓயாததால் ரஷ்ய ராணுவம் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments