பொங்கல் முடித்து திரும்புவோருக்காக 16,709 பேருந்துகள் இயக்கம் - தமிழக போக்குவரத்து துறை

0 4803

பொங்கல் முடித்து திரும்புவோருக்காக நாளை முதல் 16 ஆயிரத்து 709 பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் படிப்பு, பணி, தொழில் நிமித்தமாக தங்கி இருப்போர், சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டன. இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை முதலே மீண்டும் நகர்புறங்களுக்கு மக்கள் திரும்புவார்கள். இதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதன்படி இந்த சிறப்பு பேருந்துகள் நாளை முதல் 19ம் தேதி வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments