தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய போது முடக்கப்பட்ட ஏ.டி.எம் சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்.!

0 4343

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய போது முடக்கப்பட்ட ஏ.டி.எம் சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளன.

இது குறித்து அந்நாட்டின் மத்திய வங்கியான டா ஆப்கானிஸ்தான் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வணிக வங்கிகள் மற்றும் வங்கிகளின் ஒன்றியத்துடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கி அமைப்பு மற்றும் அதன் சேவைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் முயற்சியாக குறிப்பிட்ட பகுதிகளில் ஏ.டி.எம் சேவைகளை தொடங்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு நபர் வாரத்திற்கு 20 ஆயிரம் ஆப்கானி-யைத் தான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments