இடப்பிரச்சினை தொடர்பான தகராறில் ஆம்புலன்ஸ் டிரைவர் வீடு இடிப்பு

0 3196

மதுரை மாவட்டம் கரையாம்பட்டியில் இடப்பிரச்சினை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அடியாட்களுடன் வந்து வீட்டை இடித்து தள்ளிய ஒரு தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆம்புலன்ஸ் டிரைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆம்புலன்ஸ் டிரைவர் ராமர் குடியிருக்கும் இடம் தன் தந்தையிடம் இருந்து ஏமாற்றி பெறப்பட்டது எனக் கூறி அருள் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். வழக்கு விசாரணை குறித்து ராமர் காவல் நிலையம் சென்றபோது, அவரது வீட்டை 40 ஆடியாட்கள் மற்றும் ஜே.சி.பி. இயத்திரத்துடன் சென்று அருள் இடித்துத் தள்ளியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார் மனுவை போலீசார் பெற மறுப்பதாக ராமர் கூறியுள்ளார். வீடற்று தவிக்கும் தங்களுக்கு முறையான விசாரணை வேண்டி ராமர் கோரிக்கை விடுத்துள்ளார்.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments