ஜார்க்கண்டில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவருக்கு நேர்ந்த அற்புதம்

0 10881

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில்  நடக்க முடியாத  மற்றும் பேசும் திறனை இழந்த 55வயது  நபர் ஒருவர் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்ட மறுநாள் நடக்கவும், பேசவும் கூடிய திறனை பெற்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Salgadih கிராமத்தில் வசிக்கும் துலர்சந்த் முண்டா என்பவர் 5ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலைவிபத்து காரணமாக பேசவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4ந்தேதி அவருக்கு அங்கன்வாடி ஊழியர் ஒருவர் கோவிஷீல்டு முதல்தவணை தடுப்பூசியை போட்டுள்ளார்.

  மறுநாள் துலர்சந்த் முண்டா எழுந்து நிற்கவும், சிற்சில வார்த்தைகளை பேசும் திறனையும் பெற்றுள்ளார். இதனை உறுதிப்படுத்திய மருத்துவர் ஜிதேந்திர குமார், முண்டாவின் அதிசயமான இந்த நடவடிக்கை குறித்து ஆராய 3பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments